வியாழன், 18 டிசம்பர், 2014

செண்டை மேளம் - இறுதி பாகம்

செண்டை

பதினெட்டு வாத்யவும் செண்டைக்கு தாழே”. கேரள மண்ணில் வழக்கில் உள்ள பழமொழி. மலையாளத்திற்குகொடுந்தமிழ்என்று மற்றொரு பெயரும் உண்டு.
மேற்சொன்ன பழமொழி மூலம்பதினெட்டு வாத்தியங்களும் செண்டைக்கு கீழ் தான்”  என்று புரியும். “மிருதங்கம்” “மத்தளம்” “திமில” “இடக்க” “உடுக்கு” “மிழவு” “தம்புரு” “வீனா” “புல்லுவ வீனா” “குழல்” “குருங்குழல்” “நாகஸ்வரம்ஓடக்குழல்” “கொம்பு” “மஞ்சிற” “ஷங்கு” “தொப்பி மத்தளம்” “புல்லுவன் குடம்ஆகியவை அந்த பதினெட்டு வாத்தியங்களில் அடங்கும். இறைமை தொடர்புடைய மங்கள காரியங்களுக்கு இசைக்கப்பட்டவையாகவே இவை உள்ளன.
ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இசைக்கப்படும் பல தாள வாத்தியங்களில்பாஞ்சாரி மேளம்மற்றும்பாண்டி மேளம்மிகவும் பிரபலமானதும் பழமையானதும் ஆகும். இதில்பஞ்சாரி மேளம்மற்றவைகளுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. “செம்பட”  “அஞ்சதந்த” “த்ருவம்” “அதந்த” “சம்பஆகியவையும் இதர மேளங்கள் ஆகும்.
செண்டை இசைக்கப்படும்போது அதன் துணை வாத்தியங்களாககுரும்குழல்” “இலதாளம்” “கொம்புஇருப்பதுண்டு. ஒவ்வொரு தாளம் மாறும்போதும் அதை நிர்வகித்து மாற்றுபவர் பெரும்பாலும்குழல்இசைப்பவர் ஆவார். இவரின் மாற்றங்களை மற்றவர் புரிந்து தாள மாற்றங்களை செய்வர்.
செண்டை இசைக்கப்படும்போது இசைப்பவர்கள் வரிசை கிரமமாக நிற்பர். “உருட்டு செண்டைபிரதான வாத்தியமாகவும், “வீக்கம் செண்டைதாள நிர்ணய வாத்தியமாகவும், “இல தாளம்வீக்கம் செண்டைக்கு துணை வாத்தியமாகவும், “கொம்பு மற்றும் குரும்குழல்இரண்டும் மொத்த வாத்திய தாள கட்டைகளை ஒரு வரையறைக்குள்ளும், சமமாகவும் வைக்க உதவுகிறது.
செண்டை இசைப்பவர்கள் நிற்பதிலும் ஒரு விதிமுறை உண்டு. உருட்டு செண்டைக்கு சமமான எண்ணிக்கையில் கொம்பு மற்றும் குரும்குழல் இருக்கும். உருட்டு செண்டையை விட எண்ணிக்கையில் இளதாலம் இரு மடங்காகவும் வீக்கம் செண்டை மும்மடங்காகவும் இருக்கும்.


இசைக்கும்போதுதாளம்” “தாளவட்டம்” “காலம்” “அக்ஷரகாலம்ஆகியவை மிக முக்கியமானதாகும்.
தாளம்தாளம், காலத்தின் ஒரு பிரிவாகும்.
தாளவட்டம்ஒரு தாள சுழற்சியை முடிக்க உதவும் கால நிர்ணயம்.
காலம்தாள சுழற்சியை குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் முடிக்க உதவும்
வேக மாறுபாடு.
அக்ஷரகாலம்ஒரு நொடிக்குள்ளான தாள அமைப்பு குறித்தது.

செண்டை பாரம்பரிய முறைப்படி கற்பிக்கப்படுகிறது. ஆரம்ப வகுப்புகளில் உள்ளங்கை பதப்பட வேண்டி மரத்தில் அடித்து தாள ஓசை சொல்லி கொடுக்கப்படுகிறது. பிறகு செண்டைகோல் சுழற்ற பயிற்சி அளிக்கப்படும்.


இரு கைகளிலும் செண்டை கோல் வைத்து சுழற்றி இசைக்கும்போது வலது கையில் உள்ள கொம்பானது செண்ட வட்டத்தின் மேல் பாகத்திலும் இடது கையில் உள்ள கொம்பானது செண்ட வட்டத்தின் கீழ் பாகத்திலும் அடித்து ஓசை எழுப்பப்படுகிறது.

செண்டை இசை பயிற்சியில் முதல் தாளமாககணபதி கைஉள்ளது. இந்த தாளத்தில் முப்பத்தியேழு இசை துடிப்புகள் உண்டு.
கணபதி கைதாளம் பயின்றதும் கி என தொடங்கும்சாதகம்பயிற்றுவிக்கப்படுகிறது.
கி பயிற்சியில்ஒன்னாம் காலம்” “ரண்டாம் காலம்” “மூணாம் காலம்” “நாலாம் காலம்என வேக வடிவத்தின் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நான்கு காலமும் 3, 6, 9, 12 தாளக்கட்டு பிரமாணத்தில் உயர்ந்து கொண்டே செல்லும்.

வாய் தாரிஎன்பதுசாதகபயிற்சியின் போது சொல்லப்படும்வாய் பயிற்சிஆகும்.
செண்டை வாத்தியத்தில் பல சாதக முறைகள் உள்ளது. இந்த இசையை முறைப்படி கற்றுத்தரும் ஆசான் இதை தனது சீடர்களுக்கு கைவசப்படுத்தி தருகிறார். சாதகம் என இங்கே கூறுவது ஒவ்வொரு நிகழ்வுக்கு ஏற்றவாறு தாள மெட்டுக்களை மாற்றி அமைப்பதாகும். இதில் முக்கியமாக கோயில் சம்பந்தப்பட்ட தாள மெட்டுக்களும், வாழ்வியலின் சுப நிகழ்சிகளுக்கான தாள மெட்டுக்களும் முக்கியமானதாக உள்ளது.
வாத்திய கலை பிரிவில் முன்பு சொன்னது போல் பல வகைகள் இருந்தாலும், அதில் முக்கிய இடம்பாஞ்சாரி” “பாண்டி” “தாயம்பகஎன்ற இசைக்கு உள்ளது. இதில்தாயம்பகஆன்மீக நிகழ்சிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. “வலம் தலபாகத்தில் இசைப்பதன் மூலம்தேவ நாதம்மற்றும்இடம் தலபாகத்தில் இசைப்பதன் மூலம்அசுர நாதம்இசைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு குழுவும் தனக்கென ஒரு தனித்தன்மையை பின்பற்றும். தொடர்ச்சியாக பல குழுக்களின் இசையை கேட்டு ரசித்தவர்களால், ஒவ்வொரு குழுவின் தனித்தன்மையையும் எளிதில் அடையாளம் கண்டு ரசிக்க இயலும்
பாஞ்சாரி
செண்டையில் ஒரு கையில் செண்டைக்கோலும், மறு கை உள்ளங்கையாலும் வாசிப்பதுபாஞ்சாரியின் அடையாளம் ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் 5 காலம் என 3 பிரிவாக இசைக்கப்படுகிறது. 96 அக்ஷர காலத்தில் தொடங்கி, 6 அக்ஷர காலத்தில் நிறைவடைகிறது. மூன்று பிரிவையும் செண்டைக்கோல் சுழற்றுவதை வைத்து அடையாளம் காணலாம். 
முதல் பிரிவில்நேர்க்கோல்என்பது, முறைப்படி மெதுவாக செங்குத்தாக செண்டையில் அடித்து வாசிப்பது. இரண்டாம் பிரிவாகியதகிடயில் இரு கைகளும் சாய்வாக சுழலும். மூன்றாம் பிரிவாகியகுழ மறிஞ்சஎன்ற காலம் வேகமாக இசைப்பதாகும்.
பாஞ்சாரியில்களமிடல்என்பது அடிப்படை அல்லது முதல் தாளமாக உள்ளது. பாஞ்சாரி மேளம்  இசைக்கப்படும்போது அதன் கட்டமைப்பு பன்னிரண்டாம் தாளமாகியசெம்பட வட்டம்முடியும்போது தீர்வாகும். செம்பட வட்டம் என்பது ஒரு அக்ஷர காலத்தை எட்டு பிரிவாக பிரிப்பதாகும். இரண்டாம் காலமாகியவிளம்ப காலம்” (பதி காலம்) “வர்திகம்எனப்படுகிறது. மேளத்தின் பயணம் இரண்டில் தொடங்கி ஐந்தாம் தாளத்தின் வழியே பயணிக்கிறது. அதாவது  6, 3, 1 ½, ¾ செம்பட வட்டத்தில் பயணப்பட்டுதீரு கலசம்என்ற ஐந்தாம் தாளத்தில் நிறைவுறுகிறது.

பாண்டி
கேரள மாநிலத்தில் திருச்சூர் என்னுமிடத்தில் உள்ளபாறைமேல் காவு” (காவு என்றால் கோயில் என்று பொருள்) என்ற கோயிலின் திருவிழாவில் வாசிக்கப்படும்இலஞ்சி தர மேளம்என்ற நிகழ்வில் முக்கிய பங்கு வசிக்கும் இசைபாண்டிஆகும்.
செண்டை மேளங்களில் மிகவும் வித்தியாச அமைப்பை கொண்டதுபாண்டிமேளம். சம அளவு எண்ணிக்கையில் ஏற்ற, இறக்கங்களை கொண்ட தாள அமைப்பை உடையதுபாண்டிமேளம்.
பாண்டிமேளத்தின் துவக்கம்கோலும்பல் எனும் கூட்டி பெருக்கல்என்ற முறையில் துவங்குகிறது. “பாண்டிமேளத்தின் தாள அமைப்பைகாலம்” “அக்ஷர காலம்என பிரிப்பது மிகவும் கடினம். கால பிரமாணங்களுக்கு கட்டுப்படாதது என்றாலும், எல்லா தாள கட்டுகளையும் சீரான வேகத்தில் கடந்துகலசம்எனப்படும் முடிவை அடைகிறது. நான்காம் தாள வட்டம் முடிந்த பிறகு வரும், மூன்று முதல் ஆறு தாள வட்ட காலப்பிரமாணத்தில்கலசம்எனும் முடிவை அடைகிறது. கலச தாள வட்டங்கள்நேர்க்கோல்முறைப்படி வாசிக்கப்படுவதுபாண்டிமேளத்தின் தனிச்சிறப்பாகும். நூற்றுக்கு மேற்பட்ட செண்டை மேளங்களும், ஐம்பதுக்கு மேற்பட்ட துணை வாத்தியங்களும் இசைப்பதை ரசிப்பது தனி சுகமாகும்.

தாயம்பக
வாத்திய கலையின் மற்றொரு முக்கியமான அம்சம்தாயம்பக”. “இல தாளம்உதவியுடன்செண்டையில் ஒன்று அல்லது இரண்டு பிரமாணிகள் சேர்ந்து இசைப்பதுதாயம்பக”.
தாயம்பகமுற்றிலும் ஆலய வாத்தியம் ஆகும். “தீப ஆராதனைமற்றும்அத்தாழ பூஜைக்கும் இடையில் இசைக்கப்படுகிறது. ஆலயத்தில் உள்ளபெரிய பலிக்கல்மற்றும்பலி வட்டம்ஆகிய இடங்களுக்கு இடையில் நின்று வாசிக்கப்படுகிறது. அரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேர கால அளவில் இசைக்கப்படுகிறது.
ஆலய வாத்தியங்கள் இசைக்கப்படும்போது, இசை கலைஞர்கள் முன்பு  “திரு விளக்கு”, நுனி வாழை இலையில்அரிசி” “தேங்காய்” “வெற்றிலை” “பாக்கு” “தக்ஷிணை எனப்படும் காணிக்கை” (காணிக்கை பொதுவாகதங்கம்” “வெள்ளிஅல்லதுபணம்”) வைக்கப்படுவது வழக்கம். “தாயம்பகஇசையில்பிரமாணிஎனப்படும் தலைவர் நடுவிலும், இரு பக்கமும்இல தாளம்நிற்க இசைக்கப்படுகிறது.
செண்டையின் வலம் தலையில்கொட்டிவேல்க்குக” (இசைத்து வரவேற்றல்) எனும் முறையில் வணக்கம் செலுத்தும் விதமாக இசைத்துதிரிபுடஎன்னும் தாளத்தில் தொடங்கிஏகஎன்னும் தாளத்தின் வழியே நிகழ்ச்சிக்கு முன்னுரை அமைக்கப்படும். இப்போதுபிரமாணிஎனும் தலைவன் இரு முறை தன் கோலால் இசைத்து நிகழ்ச்சியின் துவக்கத்தை அறிவிப்பார்.
பதி காலம்” (செம்பட வட்டத்தின் துவக்க தாளம்) தொடங்கி, “கூறு” “இடவட்டம்எனும் முதல் நிலை கடந்துஎட நில” “எரி கிடஎன்ற இரண்டாம் நிலை வழியே உயர் தாளத்தை அடைந்து பின்நீர் வீழ்ச்சிபோல் கீழ் தாளத்தை அடைந்து நிறைவுறுகிறது.
தாயம்பகநிகழ்ச்சியில்பிரமாணிஎனப்படும் தலைவரின் எண்ணிக்கை தேவைக்கேற்ப கூட்டப்படும். பிரமானிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவலம் தலமற்றும்இல தாளத்தின்எண்ணிக்கை கூட்டப்படும். எண்ணிக்கை எவ்வளவு மாறினாலும்இடம் தலஇரண்டு மட்டுமே இருக்கும்.

“தயம்பக” இசைக்கும்போது, குழுவின் தலைவர் ஆகிய “பிரமாணி” தன்னுடன் இசைக்கும் மற்ற இசை கலைஞர்களுடன் தன் செண்டையின் வழியே இசை கட்டைகளின் குறிப்பை உணர்த்தும் அழகே அலாதியானது. அவர் தான் ஒவ்வொரு சீடனுக்கும் தனித்தனியே இசைத்து அவர்களின் திறமையை ஊக்குவிப்பதோடு இசைக்கு மெருகேற்றுவார்.


நாம் மயங்க செண்டை தொடர்ந்து முழங்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக